Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos
நீங்களும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை எழுதி அனுப்பலாம். டிப்ஸ்களை அனுப்ப இங்கே கிளிக்கவும் 
குழந்தைகளுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினை என்றால் அது சளி தொல்லைதான். இதனை எளிய நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்தலாம்.

இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.

வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இரண்டு மூன்று நாட்களுக்கு இது போன்று செய்தால், ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இதேபோல் மற்றொரு குறிப்பும் உள்ளது. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து கொடுத்தாலும் ஜலதோஷம் நீங்கிவிடும்.






காய்கறிகளை பாலீதின் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப் போகிறீர்களா கவர்களில் கோணி ஊசி அல்லது கூரான ஆணி கொண்டு குத்தி துளைகள் போட்ட பின், காய்களை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும். இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டிவிட்டு, இரண்டாக பிளந்து வைத்து விடவும். பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
பாகற் காய்களை அரிசி பிசைந்த தண்ணீரீல் சிறிது நேரம் போட்டு வைத்தால் கசப்பு தன்மை குறையும்
இட்லி பொடி அரைக்கும் போது சிறிது தனியா வெந்தயம் சேர்த்தால் மணமும் ருசியும் அதிகரிக்கும்
உளுத்தம் வடை செய்யுமபோது சிறிது துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால் உளுத்தம் வடை சுவையாக இருக்கும்.

பூரி செய்யும் போது கோதுமைமாவுடன் சிறிது வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு மொறு என இருக்கும்

மீன் குழம்பு தாளிக்கும் போது வெந்தயம் போட்டு தாளிக்க மணமும் ருசியும் அதிகரிக்கும்.

வெந்தயம் வால்மிளகு சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தேங்ங்காய் எண்ணெயில் கலந்து தடவிவர இளநரை மறையும்
கறுப்பு மிளகை பாலில்கலந்து நைசாக அரைத்து பத்து போட்டால் தலைவலி பறந்து விடும்
 
         
 
 



Home News Cinema Gallery About us Contact us Free Ads