Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos
Subamankalam

டுவென்டி20: இலங்கைக்கு பதிலடி தருமா இந்தியா?

Saturday , 12th December 2009 09:04:33 AM

இந்​திய,​​ இலங்கை அணி​க​ளுக்கு இடை​யி​லான 2-வது சர்​வ​தேச டுவென்டி20 ஆட்​டம் மொஹா​லி​யில் சனிக்​கி​ழமை நடை​பெ​ற​வுள்​ளது.​

நா​க​பு​ரி​யில் நடை​பெற்ற முதல் டுவென்டி20 ஆட்​டத்​தில் இலங்கை 29 ரன்​கள் வித்​தி​யா​சத்​தில் வெற்றி கண்​டது.​

இதை​ய​டுத்து இந்த 2-வது ஆட்​டத்​தில் இந்​தியா வெற்றி பெற்றே ஆக​வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது.​ இலங்​கைக்கு 2-வது ஆட்​டத்​தில் இந்​தியா பதி​லடி கொடுத்து தொடரை சமன் செய்​ய​வேண்​டும் என்று ரசி​கர்​கள் எதிர்​பார்க்​கின்​ற​னர்.​

மு​தல் ஆட்​டத்தை பயிற்சி ஆட்​ட​மாக கருதி விளை​யா​டி​ய​தால் தோல்வி கண்​டோம் என்று இந்​திய அணி​யின் கேப்​டன் எம்​எஸ் தோனி கூறி​யுள்​ளார்.​

எனவே 2-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி சிறப்​பாக விளை​யாடி தொடரை சமன் செய்​யும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​
கா​யம் கார​ண​மாக ஸ்ரீசாந்த்,​​ ரோஹித் சர்மா ஆகி​யோர் அணி​யில் இடம்​பெற மாட்​டார்​கள்.​ இதைத் தொடர்ந்து ரவீந்​திர ஜடேஜா அணிக்கு அழைக்​கப்​பட்​டுள்​ளார்.​

ஃ​பீல்​டிங்​கி​லும்,​​ பெüலிங்​கி​லும் இந்​திய அணி கோட்டை விட்​ட​தால் முதல் ஆட்​டத்​தில் தோல்வி கண்​டது.​ 2-வது ஆட்​டத்​தில் அதை சரி செய்​து​கொண்டு சிறப்​பாக விளை​யா​டு​வோம் என்று தோனி கூறி​யுள்​ளார்.​

கம்​பீர்,​​ சேவாக்,​​ தோனி,​​ யுவ​ராஜ் சிங்,​​ சுரேஷ் ரெய்னா,​​ யூசுப் பதான் ஆகி​யோர் தங்​க​ளது பங்​க​ளிப்பை சிறப்​பாக அளிக்​கும் பட்​சத்​தில் இந்​திய அணிக்கு வெற்றி கிட்​டும்.​

இதே​போல நெஹ்ரா,​​ இஷாந்த் சர்மா,​​ தியாகி,​​ ஓஜா ஆகி​யோர் திற​மை​யாக பந்​து​வீ​சி​னால் இந்​திய அணி தொடரை சமன் செய்​து​வி​டும்.​

அதே நேரத்​தில் முதல் ஆட்​டத்​தில் வெற்றி பெற்ற உற்​சா​கத்​தில் இலங்கை கள​மி​றங்​கு​கி​றது.​

ஜய​சூர்யா,​​ தில்​ஷன்,​​ சங்​க​கரா,​​ மஹேல ஜய​வர்த்​தனா,​​ கபு​க​டேரா,​​ மேத்​யூஸ் என அந்த அணி​யின் பேட்​டிங் பட்​டி​யல் நீளு​கி​றது.​ முதல் ஆட்​டத்​தில் 37 பந்​து​க​ளில் 78 ரன்​கள் குவித்த சங்​க​கரா இந்த ஆட்​டத்​தி​லும் கலக்​கு​வார் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​

அ​ணி​கள்:​ இந்​தியா:​ தோனி ​(கேப்​டன்)​,​​ சேவாக்,​​ கம்​பீர்,​​ யுவ​ராஜ் சிங்,​​ ரெய்னா,​​ தினேஷ் கார்த்​திக்,​​ யூசுப் பதான்,​​ அஸ்​வின்,​​ இஷாந்த் சர்மா,​​ ஆசிஷ் நெஹ்ரா,​​ அசோக் திண்டா,​​ சுதீப் தியாகி,​​ பிரக்​யான் ஓஜா,​​ ரவீந்​திர ஜடேஜா​.
​இ​லங்கை:​ சங்​க​கரா ​(கேப்​டன்)​,​​ தில்​ஷன்,​​ ஜய​சிங்கே,​​ ஜய​சூர்யா,​​ மஹேல ஜய​வர்த்​தனா,​​ சமர கபு​க​டேரா,​​ குல​சே​கரா,​​ மலிங்கா,​​ மேத்​யூஸ்,​​ மெண்​டிஸ்,​​ முர​ளீ​த​ரன்,​​ புஷ்​ப​கு​மாரா,​​ பெர்​னாண்டோ,​​ வீர​ரத்னே,​​ வெல​கெ​டேரா.​
ரோஹித் இல்லை​

2-வது டுவென்டி20 ஆட்​டத்​தில் இந்​திய வீரர் ரோஹித் சர்மா காயம் கார​ண​மாக வில​கி​யுள்​ளார்.​

ரோஹித் சர்மா,​​ தோள்​பட்​டை​யில் ஏற்​பட்ட காயம் கார​ண​மாக மொஹாலி போட்​டி​யில் விளை​யாட மாட்​டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நா​க​பு​ரி​யில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் ஸ்ரீசாந்த்,​​ வைரஸ் தொற்று கார​ண​மாக அவ​திப்​பட்​டார்.​ இத​னால் அவர் முதல் போட்​டி​யில் பங்​கேற்​க​வில்லை.​ அவர் உடல்​நிலை சரி​யா​கா​த​தால் 2-வது ஆட்​டத்​தி​லும் அவர் பங்​கேற்க முடி​யாத நிலை உள்​ளது.​

உடல்​ந​லக்​கு​றைவு கார​ண​மாக இந்​திய வேகப்​பந்து வீச்​சா​ளர் ஸ்ரீசாந்த் மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.​
தொண்​டைவலி,​​ காய்ச்​சல்,​​ இரு​மல் கார​ண​மாக வியா​ழக்​கி​ழமை இரவு ஸ்ரீசாந்த் அவ​திப்​பட்​டார்.​ இதை​ய​டுத்து அவர் மொஹா​லி​யி​லுள்ள மருத்​து​வ​ம​னை​யில் அன்​றி​ரவே அனு​ம​திக்​கப்​பட்​டார்.​

அ​வ​ரைப் பரி​சோ​தித்த டாக்​டர் ஏ.ஆர்.​ பானர்ஜி கூறி​ய​தா​வது:​

ஸ்ரீசாந்​துக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரு​கி​றோம்.​ அவர் தற்​போது ஓர​ள​வுக்​குத் தேறி​விட்​டார்.​ அவ​ருக்கு பல்​வேறு பரி​சோ​த​னை​களை செய்​துள்​ளோம்.​ பன்​றிக் காய்ச்​சல் சோத​னை​யும் அவ​ருக்கு செய்​யப்​பட்​டுள்​ளது.​ சோ​தனை முடி​வு​க​ளுக்​கா​கக் காத்​தி​ருக்​கி​றோம் என்​றார் அவர்.​

பிற செய்திகள்

மேலும்...

Tags :

Forward to your Friend...காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் 
 , மலேசியாவில் எந்திரன் பாடல் வெளியீடு , ஆகஸ்ட் 2ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: 22 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது  , ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து   , இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை , ஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜா விடுதலை , கேரம் சாம்பியனுக்கு விளையாட்டுப் பிரிவு பி.இ. ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுப்பு , ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்களுக்கு அநீதி,வேதனை , ஆப்கன் ஆதிபர் கர்சாய் ஆவேசம் பாகிஸ்தானில் முகாம்களை ஒழிக்க வேண்டும் , காஷ்மீர் பற்றி பேசுகிறர் குரேஷி , ஆகஸ்ட் 29-ல் 16 நாடுகள் பங்கேற்கும் சைக்கிள் பந்தயம் , டெண்டுல்கர் இரட்டை சதம்: டிராவை நோக்கி 2-வது டெஸ்ட் , கத்ரீனா நிர்வாணக்காட்சி இணையதளத்தில் : பற்றி விளக்கும் கத்ரீனா , பாகிஸ்தானில் மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு , கால்பந்து அணியின் பயிற்சியாளர் மாரடோனா நீக்கம் , சிறுத்தை புலி கடித்த குழந்தை , 2-வது டெஸ்ட்: சச்சினுக்கு 48-வது சதம்  -  இந்தியா 382 ரன் , பாகிஸ்தானில் மலையில் விமானம் மோதி 152 பேர் பலி? , நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிக்கு எதிரான செயல் , தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
 , தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை தொடங்கியது
 , நவீன்சாவ்லா நாளை ஓய்வு பெறுகிறார் , ஜெயலலிதா வீடு எதிரே அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
 , இலங்கை நிலவரத்தை ஆராய இந்திய அதிகாரி பயணம் , உளுந்தூர்பேட்டையில் அ.இ.அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்   , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji


Comments
Reply Message

Post Your Commnets
Name*
Email ID *
தமிங்கிலத்தில் இங்கே டைப் செய்யவும்
(உம்) ammaa

* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும்
(உம்) அம்மா