ஈரான் நாட்டில் மனித உரிமைக்காக போராடி வரும் ஷிரின் எபாடி என்ற பெண்ணுக்கு கடந்த 2003-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் சில மாதங்களுக்கு முன்பு, ஈரான் அரசின் கெடுபிடிக்கு உள்ளானார். இதனால் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன்பே, ஈரானை விட்டு வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஈரான் பறித்துக்கொண்டு விட்டதாக, நோபல் பரிசு வழங்கும் நார்வே நாடு குற்றம் சாட்டியது.
இந்நிலையில், அந்த நோபல் பரிசை, நார்வேக்கு ஈரான் திருப்பி அனுப்பி உள்ளது. அதை ஷிரின் எபாடியிடம் நார்வே திரும்ப ஒப்படைத்துள்ளது.