ஆசியாவிலேயே செக்சியான பெண்ணாக பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
லண்டனில் இருந்து வெளியாகும் `ஈஸ்டர்ன் ஐ' என்ற பத்திரிகை, ஆசியாவிலேயே செக்சியான 50 பெண்களின் பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டு உள்ளது.
இதில், 24 வயதான இந்தி நடிகை கத்ரீனா கைப் முதல் இடம் பெற்று உள்ளார். அதாவது, ஆசியாவில் உள்ள பெண்களிலேயே மிகவும் செக்சியானவராக அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த ஆண்டும் கத்ரீனா கைப் தான் முதல் இடத்தை பிடித்தார். இப்போது 2-வது தடவையாக அவர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த பட்டியலில் உள்ள முதல் 10 பேர்களில் இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ராவுக்கு 2-வது இடமும், கரீனா கபூருக்கு 5-வது இடமும், பிபாஷா பாசுவுக்கு 6-வது இடமும், லாரா தத்தாவுக்கு 7-வது இடமும், ஐஸ்வர்யா ராய்க்கு 8-வது இடமும், தீபிகா படுகோனேக்கு 10-வது இடமும் கிடைத்து இருக்கிறது.
3-வது இடத்தை `ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த நடிகை பிரீடா பின்டோ பெற்று உள்ளார். 4-வது இடம் இங்கிலாந்து டெலிவிஷன் நடிகை லைலா ராவ்ஸ்சுக்கும், 9-வது இடம் பாகிஸ்தான் நடிகை மேவிஷ் ஹயாத்துக்கும் கிடைத்து உள்ளது.