அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மகள் செல்சியா (வயது 30) மற்றும் அந்த நாட்டின் பிரபல நிதி முதலீட்டாளர் மார்க் மெஸ்வின்ஸ்கி ஆகியோருக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. சுமார் ரூ.25 கோடி செலவில் மிக ஆடம்பரமாக இந்த திருமணம் நடைபெறுகிறது. 50 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்டமான இடத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இதுவரை திருமண அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. திருமணத்துக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த ஒபாமா, இந்த தகவலை வெளியிட்டார். மணப்பெண் செல்சியாவின் தாயாரும் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி, ஒபாமா தலைமையிலான மந்திரி சபையில் வெளியுறவு மந்திரியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.